பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-06 12:48 GMT
  • whatsapp icon


தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்த கட்டிடம் சேதமடைந்து உள்ளது. செடிகள் புதர் போல் மண்டிக்கிடக்கிறது. மேலும் போஸ்டர்கள் ஒட்டும் இடமாக உள்ளது.இதனால் இந்த பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மது பிரியர்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செடிகள் வளர்ந்து சேதமடைந்துள்ள பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்