“தினத்தந்தி”க்கு பாராட்டு

Update: 2023-08-13 17:02 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டஅள்ளி ஊராட்சியில் எம்.எஸ். நகர் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்து, துண்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் நீர்தேக்க தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-பிரதீப், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்