"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2023-07-30 17:40 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 2-வது வார்டு நேரலகோட்டை கிராமத்தில் குடியிருக்கும் ஆதிதிராவிடர்களுக்கு என உள்ள மயானத்திற்கு செல்லும் சிமெண்டு சாலையின் மத்தியில் மின் கம்பம் உள்ளதால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல சிரமப்படுவதாகவும் "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி அமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-பரணி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்