மயிலாடுதுறை மாவட்டம் ,மணல் மேடு அருகே உள்ள கடைவீதியில் உயர்மின்கோபுர விளக்கு உள்ளது. இந்த மின் விளக்கு காலையில் அணைக்கப்படுவதில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பகலில் எரிந்து கொண்டு உள்ளது. எனவே மின் சிக்கனம் அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகலில் மின் விளக்கு எரிவதை தடுக்கவேண்டும்
மணல்மேடு, பொதுமக்கள்
===========================