ஆபத்தான மின் கம்பம்

Update: 2023-06-07 13:35 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் உத்தண்டி குளத்தின் தென்கரையில் , தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் எதிரே சிமெண்டிலான மின் கம்பம் உள்ளது. அதன் அடிபாகம் முதல் உச்சி வரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.எந்நேரமும் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. குளக்கரையில் நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்கின்றனர். விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுப்பார்களா?

சாமிநாதன், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்