நாய்கள் தொல்லை

Update: 2023-06-07 13:34 GMT


பட்டுக்கோட்டையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நாடிமுத்து நகர்,பெரியக்கடைதெரு,முத்துப்பேட்டை ரோடு,மயில்பாளையம்,சாமுமுதலி தெரு, ஆர்.வி. நகர் ஆகிய இடங்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்