'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-04-23 17:16 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் தாழ்வாக செல்வதால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்த மின்சார துறையினர் உடனடியாக மின்சார கம்பியை உயர்த்தி கட்டியுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-நவீன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்