'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-04-12 17:21 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் தர்கா அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் உள்ளன. மேலும் சின்ன எலசகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு முத்துமாரியம்மன் கோவிலை கடந்துதான் செல்லவேண்டும். கோவில் முன்புறமுள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அந்த சாலையை சீரமைத்துள்னர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-மணி, ஓசூர்.

மேலும் செய்திகள்