'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-02-26 16:45 GMT

சேலம் 6-வது வார்டு ராம்நகரில் சாலை அமைக்கும் பணியின் போது அங்கு உள்ள பழுதான தொலைபேசி கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்க ஜல்லிகற்கள் போடப்பட்டன. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு சாலை போடப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-சேகர், ராம்நகர், சேலம்.

மேலும் செய்திகள்