நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் உள்ள மயானத்தில் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மின்மோட்டாரின் வயர்கள், தண்ணீர் உரிஞ்சும் பைப்புகள் ஆகியவை திருடுபோய்விட்டது. இதனால் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய வரும் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தண்ணீர் வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும்.