குருசாமிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் பொன்குறிச்சி ஆயிபாளையம் பிரிவு ரோடு உள்ளது. இந்த பிரிவு ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் அப்பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்