திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று, சேதமடைந்த காணப்படுகிறது. அதன் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.