ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தில் பள்ளகல்பூண்டி பகுதியில் விவசாய நிலத்தில் அமைந்துள்ள ஒரு மின்கம்பம் சமீபத்தில் காற்றுடன் பெய்த கனமழையால் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்த மின் கம்பத்தை மின்வாரியத்துறையினர் இன்று வரை சரி செய்யவில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து நேராக நிமிர்த்து செங்குத்தாக அமைக்க வேண்டும்.
-சவுந்தரராஜன், கல்பூண்டி.