பழனி நகராட்சி 12-வது வார்டு ராஜாஜி தெருவில் பல நாட்களாக தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. அதோடு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் தெருக்களில் நடமாட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அவலநிலை உள்ளது. எனவே பழுதடைந்த தெருவிளக்கை விரைந்து சரிசெய்ய வேண்டும்.