மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக குதிரைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்கள் குதிரைகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் குதிரைகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுதுறை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், மயிலாடுதுறை.