புறக்காவல்நிலையம் திறக்கப்படுமா?

Update: 2022-07-19 15:07 GMT

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது .சிக்கலில் பிரசித்திபெற்ற சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் புறக்காவல் நிலையம் , தொடர்ந்து பூட்டியே கிடக்கிறது. சிக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்