தபால் பெட்டி வைக்க கோரிக்கை

Update: 2023-01-08 16:55 GMT

பர்கூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் தபால் நிலையம் உள்ளது. தபால் போடுபவர்கள் அங்கு சென்று தான் பெட்டியில் போட வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் தபால் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. சில ஆண்டுகளாக தபால் பெட்டிகள் எங்கும் வைப்பதில்லை. அரசு அலுவலக தபால்களை கூட தனியார் கூரியர் சர்வீஸில் அனுப்பி வருகின்றனர். இதையும் அரசு தபால் நிலையங்கள் மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே பர்கூர் பேரூராட்சி 15 வார்டுகளிலும் கிராமப்புறங்களிலும் தபால் பெட்டிகள் வைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்