மரக்கிளை அகற்றப்படுமா?

Update: 2022-11-16 12:47 GMT


கும்பகோணம் வட்டம் பழவாத்தாங்கட்டளை ஊராட்சியில் யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள காந்திஜி சாலையில் பழைய அரசு குடியிருப்பில் மிகப்பெரிய புங்கமரம் உள்ளது. தற்போது காற்றின் வேகத்தில் அருகில் உள்ள மின் கம்பியில் மரக்கிளை பட்டு மின் தடை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரக்கிளையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரவேல், பாரதி நகர்

மேலும் செய்திகள்