குரங்குகள் அட்டகாசம்

Update: 2022-11-16 12:43 GMT


தஞ்சை நகரில் எம்.கே. மூப்பனார்சாலை, தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ் நகர் போன்ற இடங்களில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் சென்று காய்கறி மற்றும் பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் சிறுவர்களை விரட்டி சென்று குரங்குகள் கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தஞ்சை நகரில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்