"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2022-09-29 16:40 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரத்தின் மையத்தில் சாலையின் இரு புறமும் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வந்தது. இதனால் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து தொடர் விபத்துக்களும் ஏற்படுகின்றன என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய "தினத்தந்தி"க்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-சந்தோஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்