உடை மாற்றும் அறை வேண்டும்

Update: 2022-09-24 15:33 GMT


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பரிதியப்பர்கோவில் கிராமத்தில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் ஆலயம் உள்ளது இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். கோவிலின் தீர்த்த குளத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் .எனவே நீராடிய பின் பக்தர்கள் உடை மாற்றுவதற்கு அறை இல்லாத காரணத்தால் திறந்த வெளியில் உடை மாற்றுகின்றனர். இதனால் பக்தர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் எனவே பக்தர்கள் நலன் கருதி குளத்தின் அருகே உடை மாற்றும் அறைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இனியதமிழன், பரிதியப்பர்கோவில்

மேலும் செய்திகள்