"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2022-09-16 16:59 GMT

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையோரம் காமராஜர் சிலை அருகே உள்ள சிக்னலில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சிக்னல் விளக்குகள் எரியவில்லை. இது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது சிக்னல் விளக்குகளை சரி செய்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி"க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்