புகார் பெட்டியால் ஆக்கிரமிப்பு அகற்றம்

Update: 2022-08-26 16:07 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கடைவீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளாலும், சாலையோரம் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் டெம்போ வாகனங்களாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் சுஞ்சல் நத்தம் ஊராட்சி பணியாளர்கள் ஏரியூர் போலீசார் உதவியுடன் அகற்றினர். இதற்கு நடவடிக்கை நடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

- கண்ணன், தர்மபுரி.

மேலும் செய்திகள்