சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்

Update: 2022-09-30 11:07 GMT

ஆரணி நகரில் 28-வது வார்டு பெரிய ஜெயின் தெருவில் மக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதி, மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லக்கூடிய பகுதியாகும். இந்தப் பகுதியில் மின் கம்பம் சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. இந்தப் பகுதியில் தான் இன்னும் சில நாட்களில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சீனிவாச பெருமாள் கோவில் பெரிய மரத்தேர் தேரோட்ட விழா நடக்க உள்ள வீதியாகும். எனவே மின்வாரியத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

-ராகவன், ஆரணி.

மேலும் செய்திகள்