போளூர் சிம்லாநகர் 2-வது தெருவில் சாலையின் நடுவே ஒரு மின் கம்பம் உள்ளது. அந்த மின் கம்பத்தால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. விவசாய நிலத்துக்கு அறுவடை எந்திரம் சென்று வர சிரமமாக உள்ளது. சாலையின் நடுவே மக்களுக்கு இடையூறாக இருக்கும் மின்கம்பத்தை ஓரமாக அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சந்திரசேகர், போளூர்.