அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் ராஜவீதியில் உள்ள ஏரிக்கரைப் பகுதியில் மின்கம்பத்தில் இருந்து மின்சாரக் கம்பிகள் மிகத் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், பலத்த காற்று வீசும் போது அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மீது மின்கம்பிகள் பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பிகளைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.