கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ஒரு பகுதியில் துருப்பிடித்துப் பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பத்தின் உறுதித்தன்மை நாளுக்கு நாள் குறைந்து, அது எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயகரமான நிலையில் காட்சியளிக்கிறது. எனவே, துருப்பிடித்த இக்கோபுரக் கம்பத்தைச் சீரமைத்துப் பாதுகாக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.