செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை கிராமம் அங்கராயநல்லூர் கூட்டுசாலையின் ஓரத்தில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் வாகன விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கூட்டுசாலையில் மின்விளக்குகளை அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.