தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-11-02 10:28 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை தெருவில் நீண்ட நாட்களாக ஜல்லிக்கற்கள் பரப்பிய நிலையில் சிமெண்டு சாலை அமைக்கப்படாமல் புல் பூண்டுகள் வளா்ந்து புதர்போல் காட்சியளிப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்பகுதியில் உள்ள புதர், செடி, கொடிகள் அகற்றப்பட்டு புதிதாக சிமெண்டு சாலை போடப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

-தனலட்சுமி, பாணாவரம்.

மேலும் செய்திகள்