தெரு விளக்குகள் எரியவில்லை

Update: 2023-05-17 17:20 GMT

ஆற்காடு பிரதான சாலைகளில் ஒன்றாக திகழ்வது எம். ஜி.ஆர்.சாலையாகும். இந்தச் சாலை ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஒரு சாலையாகும். இந்தச் சாலையில் சென்னையில் இருந்து வரும் விரைவுப் பஸ்கள் ஆற்காடு பைபாசில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுச் செல்லும் அந்தப் பயணிகள் எம்.ஜி.ஆர். சாலை வழியாக பஸ் நிலையத்தை வந்து அடைவார்கள். இரவு நேரங்களில் ஒரு சில நாட்களில் எம்.ஜி.ஆர். சாலையில் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வழியாக வரும் பயணிகள் வழிப்பறி, திருட்டு சம்பவத்தால் அச்சப்படுகின்றனர். மேலும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் சாலை இருண்டு காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜமாணிக்கம், ஆற்காடு.

மேலும் செய்திகள்