திருவள்ளூவர் மாவட்டம், பூந்தமல்லி காவல் செறி பிரதான சாலை, குறிஞ்சி நகர், பாலாஜி நகர் போன்ற பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து, பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.