புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் கோபாலப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்துவிழும் நிலையில் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். கற்றடிக்கும்போதோ, மழைக்காலங்களிலோ இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பழுதடைந்து மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.