ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பி.எம்.எஸ். கொல்லை வீதியும், சாது வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு மின்கம்பம் சாய்ந்த ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. ஆம்பூர் மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பத்தை அமைத்தனர். புகார் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-செ.ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர், ஆம்பூர்.