உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை கீழப்பாளையத்தில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.