மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2026-05-10 17:12 GMT

கலவையை அடுத்த வாழைப்பந்தல் பஞ்சாயத்துக்கும் முணுக்கப்பட்டு பஞ்சாயத்துக்கும் இடையே கமண்டல ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் குறுக்கே 25 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ஆற்காடு-ஆரணி தொகுதிகளை இணைக்கும் முக்கிய மேம்பாலம் ஆகும். ஆனால், மேம்பாலத்தில் இன்னும் மின்விளக்குகள் அமைக்கவில்லை. அந்த வழியாக செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் இரவில் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், வாழைப்பந்தல்.

மேலும் செய்திகள்