மின் சாதன பெட்டியை அகற்ற வேண்டும்

Update: 2023-03-22 16:11 GMT

காட்பாடி காந்திநகர் 2-வது கிழக்கு பிரதான சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் அருகே சிறுமின் விசை குடிநீர் தொட்டி இருந்தது. அது சாலை அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்டு அங்கு நடைபாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள போர்வெல் மூடப்பட்டது. இருப்பினும் மின் சாதன பெட்டி அகற்றப்படாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் சாதன பெட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலவன், காங்கேயநல்லூர்.

மேலும் செய்திகள்