ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-05-17 13:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி கே.வி.எஸ். நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் நீண்ட காலமாக எலும்புக்கூடு போல் காட்சி அளித்து வருகின்றது. இதனால் இந்த மின்கம்பத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் வீடுகளுக்கு மின் சப்ளை தடைபட்டால், மின்வாரிய பணியாளர்கள், இந்த மின்கம்பத்தில் ஏறுவதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்