மின் கம்பம் சேதம்

Update: 2023-03-19 16:42 GMT

ஆரணியை அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தில் மந்தவெளி பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியாக உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தின் முன்பக்கமாக அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் சேதம் ஏற்பட்டு இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் ஒரு சிறிய காற்று அடித்தாலும் மின் கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின் கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.

-ராகவன், ஆரணி. 

மேலும் செய்திகள்