தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து பொன்னவராயன் கோட்டை பள்ளிக்கூடம் பஸ் நிறுத்தம் வரை சாலையோரம் உள்ள தெருவிளக்குகள் குறைந்த வாட் பல்புகளாக எரிகிறது .
அதனால் அந்த பகுதி மிகவும் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. எனவே அடிக்கடி விபத்து நடந்த வண்ணம் உள்ளது. எப்போதும் அதிக போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிக வெளிச்சம் உள்ள மின் விளக்குகளை பொருத்த வேண்டும்.
--பொதுமக்கள், பட்டுக்கோட்டை.