மடத்துக்குளம் தாலுக்கா மைவாடி ஊராட்சிக்குட்பட்ட செட்டியார் மில் பகுதி, சக்திநகர் 2-வது தெரு குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சாய்ந்துள்ள மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சாய்ந்துள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.