உடுமலை மத்திய பஸ் நிலையப் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரவுண்டான அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு பகுதிகளுக்கு செல்வ தற்கு பொதுமக்கள் பஸ் ஏறுவதற்கு வருவதால் அப்பகுதி எப்போது பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் அங்கு வருகின்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மின் உபகரண பெட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதுகுறித்து மின் வாரிய நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. எனவே எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு உள்ள மின்சார பெட்டியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.