ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கந்தமாதான பர்வத சாலையில் உள்ள சில தெருவிளக்குகளில் பழுது ஏற்பட்டு நீண்ட நாட்களாகவே எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்து கிடக்கும் விளக்குகளை சீரமைத்து தர வேண்டும்.