ஒளிராத மின்விளக்கு

Update: 2026-08-16 07:36 GMT

ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையம் அருகே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்விளக்கு பழுதடைந்து ஒளிராமல் காணப்படுகிறது. இதேபோல் ராஜாக்கமங்கலம் கீழத்தெரு, அரசு மேல்நிலைப் பள்ளி பகுதிகளிலும் தெரு விளக்குகள் ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்தி ஒளிர வைக்க வேண்டும்.

-நாகராஜன், ராஜாக்கமங்கலம். 

மேலும் செய்திகள்