உச்சியில் உடைந்த மின்கம்பம்

Update: 2026-08-16 19:01 GMT

கண்ணமங்கலம் அருகில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் பள்ளிக்கூடம் எதிரே தெரு மின் விளக்கு கம்பம் உச்சியில் உடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க பலமுறை ஒண்ணுபுரம் மின் வாரிய அலுவலரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க வேண்டும்.

-செந்தில், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்