திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக இருட்டை பயன்படுத்தி மர்மநபர்கள் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையோரம் முக்கிய இடங்களில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செல்வ நிதின், திருப்பூர்.