தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் அருகில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சியின் தேவி நகர் பகுதியில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த மின் கம்பம் எந்த நேரமும் விழும் சூழல் உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை