உத்தமபாளையம் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில் முன்அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.