தெருவிளக்கு எரியவில்லை

Update: 2025-10-05 17:31 GMT

நல்லம்பள்ளி காமராஜர் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பெண்கள், குழந்தைகள் இரவில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்குகளை சீரமைத்து எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், தர்மபுரி.

மேலும் செய்திகள்