பர்கூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பர்கூர்-காரகுப்பம் செல்லும் சுரங்க சாலை மற்றும் கிருஷ்ணகிரி செல்லும் சர்வீஸ் சாலையோரம் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இது வேகமாக காற்று அடித்தால் கூட விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த மின்கம்பத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-முருகன், பர்கூர்.