சேலம் நிலவாரப்பட்டி ஆர்.கே.டி. நகரில் இருந்து கவுண்டன்குட்டை செல்லும் வழியில் அடுத்தடுத்து 2 மின் கம்பங்களில் கடந்த சில நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக இரவில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், நிலவாரப்பட்டி.